ஆதார், பான் கார்டு இணைப்பு – அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு!
வருமான வரி செலுத்துபவர்கள் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்காக கொடுக்கப்பட்ட கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவகாசம் நீட்டிப்பு
வருமான வரி செலுத்தும் பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும் என கடந்த ஆண்டில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கான கால அவகாசம் ஒவ்வொரு மாதமாக நீட்டித்து கொடுக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் நாடு முழுவதும் மீண்டுமாக உருவெடுத்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக வாடிக்கையாளர்கள் ஆதார், பான் இணைப்பு சேவைகளை மேற்கொள்வதில் சில சிக்கல்களை சந்தித்து வந்தனர்.
ஒரே நாளில் நாடு முழுவதும் 2 கோடி தடுப்பூசி – பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு சாதனை!
அதே வேளையில் வருமான வரித்துறை இணையதளத்தில் ஏற்பட்ட சில கோளாறுகள் காரணமாகவும் வாடிக்கையாளர்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களது ஆதார், பான் சேவைகளை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் ஆதார், பான் இணைப்பு சேவைகளை இம்மாதம் 30 ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என கடைசியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பான், ஆதார் இணைப்பு சேவைகளுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 1,669 பேருக்கு கொரோனா உறுதி; பலி எண்ணிக்கை 17- சுகாதாரத்துறை அறிக்கை!
இது தொடர்பாக வருமான வரித்துறை ஆணையர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வருமான வரித்துறை பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில் வரி செலுத்துபவர்கள் எதிர்கொண்டு வரும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.