ஒரே நாளில் நாடு முழுவதும் 2 கோடி தடுப்பூசி – பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு சாதனை!
செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் 2 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அந்நிலையில், அதற்கும் மேலாக தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்ந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொரோனா 3ம் அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதோடு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா தாக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருப்பதி பிரம்மோற்சவம் தொடர்பாக தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு – பக்தர்கள் கவனத்திற்கு!
இதனால் நோய் தொற்றை எதிர்க்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதன் மூலம் 29 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கும் வெற்றி காரணமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இனி அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி 2 கோடி தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதனை ஒட்டி, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தடுப்பூசி போடாதவர்கள் திரளாக வந்து போட்டுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், மாலை 5.15 மணி அளவில் 2 கோடி டோஸ் என்ற சாதனை இலக்கு எட்டப்பட்டு, அதையும் தாண்டி பல லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை விட பல லட்சம் அதிகமாக தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.