1 முதல் 6ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு கிடையாது? அமைச்சர் விளக்கம்!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் 7 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 1 முதல் 6-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பலர் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா தாக்கம் முதல் மற்றும் இரண்டாம் அலை என உருமாறி கோரத்தாண்டவம் ஆடியது. அதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து நோய்த்தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திருப்பினர்.
மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் ரொக்கம் – தகுதிகள், வயது வரம்பு & முழு விபரங்கள்!
ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த காரணத்தால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கர்நாடகத்தில் 7 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 1 முதல் 6-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
TCS நிறுவனத்தில் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிதாக 43,000 பேர் பணியமர்த்தல்!
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறியதாவது, மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து உள்ளது. இதனால் 1 முதல் 6-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு செய்து உள்ளோம். தற்போது தசரா விடுமுறை அமலில் உள்ளது. அந்த விடுமுறை முடிந்ததும் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறந்த அன்றே மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களும் பள்ளிக்கு வர தயாராக உள்ளனர். இதனால் பள்ளி திறந்ததும் அனைத்து மாணவர்களும் வர வாய்ப்பு உள்ளது என அவர் கூறியுள்ளார்.