TCS நிறுவனத்தில் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிதாக 43,000 பேர் பணியமர்த்தல்!
இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தொழில்நுட்ப சேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பிரபல IT நிறுவனமான TCS கடந்த அரையாண்டில் மட்டும் சுமார் 43,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
வேலை வாய்ப்பு
இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 43,000 புதியவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்ததாக தகவல் அளித்துள்ளது. அதாவது கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் உலகளாவிய வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகரித்துள்ள IT சேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கிடையில் TCS நிறுவனம், முந்தைய காலாண்டில் மொத்தம் 19,690 ஊழியர்களை பணியில் அமர்த்தியதாக குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் ரொக்கம் – தகுதிகள், வயது வரம்பு & முழு விபரங்கள்!
இதன் மூலம் அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை தற்போது 5,28,748 ஆக அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக கடந்த காலாண்டில், இந்நிறுவனம் சுமார் 5 லட்சம் ஊழியர்களை கடந்தது. தற்போது இருக்கும் மொத்த பணியாளர்களில் 36.2% பெண்கள் என்பது கூடுதல் தகவல். இது தொடர்பாக TCS நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்கட் கூறும் போது, ‘கடந்த காலத்தில் TCS நிறுவனம் இந்திய தொழில்நுட்ப துறையில் மிகக்குறைவான 11.9 தேய்வு சதவிகிதத்தை கொண்டிருந்தது.
இப்போது இந்தியா மற்றும் உலகளாவிய நிறுவனங்களும் தங்களது அலுவலகங்களில் திறமைகளை தக்கவைத்துக்கொள்ளவும், வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய திறமையான நிபுணர்களை வேலைக்கு அமர்த்தவும் போராடுகிறது. கடந்த ஆறு மாதங்களில் 43,000 புதிய பட்டதாரிகளை நாங்கள் பதிவு செய்துள்ளோம். எங்கள் ஷிப்ட்-லெஃப்ட் பயிற்சி இந்த வேலைவாய்ப்பு செயல்முறைகளை துரிதப்படுத்த உதவியது. வாடிக்கையாளர்களின் வளர்ச்சி மற்றும் உருமாற்ற திட்டங்களின் செயல்பாடுகளை பூர்த்தி செய்ய இது உதவியது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இருமடங்காக உயர்ந்த தக்காளி விலை – கவலையில் இல்லத்தரசிகள்!
மேலும் ஆர்கானிக் திறமை மேம்பாட்டில் கவனம் செலுத்துவது, கற்றலுடன் தொழிலையும் இணைப்பதன் மூலமும், ஊழியர்களின் அளவை அதிக அளவில் தக்க வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே TCS நிறுவனத்தின் ஊழியர்களில் 70% பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளதாகவும், 95%க்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டுக்குள் சுமார் 35,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
No comments