6ம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!!

0
6ம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!!
6ம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!!
6ம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!!

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பாடு அடைந்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்த சாத்தியக்கூறுகள் தொடர்பான அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

டெல்லியில் கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த திட்டமிட்டு மாநில அரசுகள் மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான பணிகளை மேற்கொண்டது. அதன்படி அனைத்து மாநிலங்களும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு அரசின் நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காற்று மாசுபட்டால் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டது.

ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கும் வனிதா விஜயகுமார் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

அதன் பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பள்ளி, கல்லூரிகளை டெல்லி அரசு திறந்தது. காற்று மாசுபாடு குறையாத நிலையில்பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறந்தற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஓரிரு மாதங்களாக தான் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டு வந்தது. தற்போது மறு உத்தரவு வரும் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. டெல்லி அரசு காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டது.

விஜய் டிவியின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ‘பாரதி கண்ணம்மா’ வில்லி நடிகை பரினா – வைரலாகும் புகைப்படம்!

இதன் விளைவாக கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு இரண்டு பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. அதாவது 6ஆம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடனடியாக பள்ளிகளை திறக்கலாம் என்றும் 1ஆம் வகுப்பு முதல், 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு திறக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. விரைவில் இதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!