தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 9 இறுதி வேலை நாள்? – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

0

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 9 இறுதி வேலை நாள்? – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இறுதித்தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டி அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

ரம்ஜான் பண்டிகை:

தமிழகத்தில் நடப்பாண்டு வழக்கத்தை காட்டிலும் முன்பாகவே 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை ஏப்ரல் 12ஆம் தேதியுடன் முடிப்பதற்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறையானது பள்ளி மாணவர்களுக்கான இறுதிதேர்வு அட்டவணைகளை வெளியிட்டுள்ளது. அதில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் பத்தாம் தேதி அறிவியல் தேர்வும், 12ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு, ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிறை பார்த்த பின்பு தான் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் முடிவு செய்வார்கள். பலமுறை பிறை கணக்கின்படி விடுமுறை தினத்தை அரசு மாற்றி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இத்தனை லட்சம் போ் விண்ணப்பப் பதிவு – அதிர்ச்சி அளிக்கும் NTA ரிப்போர்ட் !

அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 11க்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ கூட ரம்ஜான் பண்டிகை கொண்டாட வாய்ப்புகள் உள்ளது. எனவே பள்ளி கல்வித்துறை இந்த நாட்களில் அறிவித்துள்ள தேர்வுகளை மாற்றி ஏப்ரல் 9 ம் தேதி உடன் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளை முடிக்க வேண்டும் என்றும், இதன் மூலமாக ஏற்படும் குழப்பம் மற்றும் சிரமத்தை தவிர்க்க முடியும் என்றும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி எம் எஸ் முஸ்தபா அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!