ஜனவரி 15 வரை 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

0
ஜனவரி 15 வரை 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை - மாநில அரசு உத்தரவு!
ஜனவரி 15 வரை 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பேரலை தொற்றின் தாக்கத்திற்கு மத்தியில் 1 முதல் 10 வரையுள்ள மாணவர்களுக்கான பள்ளிகளை மூடும் படிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பள்ளிகள் மூடல்

கொரோனா வைரஸின் நிலையான உயர்வைக் கருத்தில் கொண்டு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச மாநில அரசு ஜனவரி 15ம் தேதி வரை அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக இந்த உத்தரவு 1 முதல் 10 வரையுள்ள வகுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் இரவு ஊரடங்கு உத்தரவை அரசு இரண்டு மணி நேரம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 6 & 7 ம் தேதி அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

இப்போது உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி, ஏதாவதொரு மாவட்டத்தில் செயலில் உள்ள கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 1,000க்கு மேல் இருந்தால், அங்கு நடைபெறும் திருமண விழாக்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் 100 பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஜிம்கள், ஸ்பாக்கள், சினிமா அரங்குகள், விருந்து அரங்குகள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் 50 சதவீத திறனில் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக நாளை (ஜன.6) முதல் தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையும் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் 992 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உத்தரபிரதேசத்தின் எந்த மாவட்டத்திலும் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட கொரோனா வழக்குகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சல் துறையில் 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – ரூ.81000 சம்பளம்!

மேலும், இம்மாநிலத்தில் 23 ஒமிக்ரான் மாறுபாடு வழக்குகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து சோதனை செய்து வருவதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். தவிர பிரயாக்ராஜ் மாக் மேளாவுக்கு வரும் பக்தர்கள் எதிர்மறை ஆர்டி-பிசிஆர் அறிக்கையை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!