தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடல்? வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?
நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட வேண்டும் என்றும் ஆன்லைன் வகுப்புகளை துவங்க வேண்டும் என்றும் முதல்வர் முக ஸ்டாலினுக்கு தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பள்ளிகள் மூடல்
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு தொடர்புடைய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த நோய் தொற்றின் தாக்கம் தினமும் கணிசமான அளவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதுமுள்ள பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகளை ஆன்லைன் முறைக்கு மாற்ற வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ரூ.2,18,200 வரை DA நிலுவை அமல் – 7வது ஊதியக் குழு தகவல்!
இது தொடர்பாக தமிழக மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் கே செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், , ‘இந்தியாவில் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு, முந்தைய டெல்டா மாறுபாட்டை விட நான்கு மடங்கு வேகமாக பரவுகிறது. இதனால் உருவாகும் அவசரகால சூழ்நிலைகளை கையாள தேவையான அனைத்து அத்தியாவசிய மருத்துவ உள்கட்டமைப்புகளையும் அரசு சேமித்து வைக்க வேண்டும். அதன் படி ஆக்சிஜன் சிலிண்டர்கள், சுகாதார நிபுணர்களுக்கான PPE கருவிகள் மற்றும் மருந்துகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் பள்ளி மற்றும் கல்லூரி வளாக வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மூலம் இந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிகளவு பரவக்கூடியதாக கருதப்பட்டுள்ள நிலையில் இம்மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில் ஆன்லைன் வகுப்புகளை மீண்டும் செயல்படுத்துவது குறித்தும் அரசு ஆலோசிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – இன்று தரிசன டிக்கெட் வெளியீடு!
தொடர்ந்து தமிழகத்தில் நோய் தொற்று பரவலைத் தடுக்க திருமண நிகழ்ச்சிகள், மத கொண்டாட்டங்கள், இறப்பு மற்றும் இறுதி சடங்குகளில் கலந்து கொள்வது உள்ளிட்ட அனைத்து வகையான கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவ சங்கம் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் மூத்த குடிமக்கள், சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊக்க மருந்துகளை வழங்குவதற்கான முடிவையும் மருத்துவ சங்கம் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.