மாநிலங்கள் தோறும் பள்ளி, கல்லூரிகள் மூடல் – கொரோனா பரவல் எதிரொலி! முழு விவரம் இதோ!

0
மாநிலங்கள் தோறும் பள்ளி, கல்லூரிகள் மூடல் - கொரோனா பரவல் எதிரொலி! முழு விவரம் இதோ!
மாநிலங்கள் தோறும் பள்ளி, கல்லூரிகள் மூடல் - கொரோனா பரவல் எதிரொலி! முழு விவரம் இதோ!
மாநிலங்கள் தோறும் பள்ளி, கல்லூரிகள் மூடல் – கொரோனா பரவல் எதிரொலி! முழு விவரம் இதோ!

இந்தியாவில் கொரோனா பேரலை தாக்கம் காரணமாக மேற்கு வங்கம், ஹரியானா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக மூடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பள்ளிகள் மூடல்

இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் மாறுபாடு தொற்று ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் இந்த நோய் தொற்றின் தாக்கம் சற்று எல்லை மீறத்துவங்கி இருக்கிறது. இப்போது இந்த தொற்றுநோயை தடுக்க ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வாக மாறி இருக்கக்கூடிய சூழலில், குறிப்பிட்ட சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்குடன் கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – போட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடல்!

இதற்கிடையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி இயக்கம் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி தற்போது ஒவ்வொரு மாநிலங்கள் தோறும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி செலுத்த துவங்கிய முதல் நாளிலேயே சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் முதல் டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இதற்கு மத்தியில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வழக்குகள் காரணமாக மேற்கு வங்கம், ஹரியானா, ஒடிசா, பஞ்சாப், உத்தரபிரதேசம், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பட்டியலில் உள்ள சில மாநிலங்கள் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன.

ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு? அரசின் திட்டம் என்ன!

அந்த வகையில் டெல்லியில் கடந்த டிசம்பர் 28ம் தேதி அன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் வேகமாக அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகளைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன. தொடர்ந்து ஜனவரி 1 முதல் 15 வரை ஆரம்ப வகுப்புகளுக்கு குளிர்கால விடுமுறையை டெல்லி அரசாங்கம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தான் மற்ற மாநில அரசுகளும், பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!