ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு? அரசின் திட்டம் என்ன!

0
ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு? அரசின் திட்டம் என்ன!
ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு? அரசின் திட்டம் என்ன!
ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு? அரசின் திட்டம் என்ன!

அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அந்நாட்டு அதிபர் மற்றும் துணை அதிபர் கொரோனா கட்டுப்பாடு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிகரிக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவ தொடங்கியது. இந்த கொரோனா பெருந்தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவி பெறும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் பலவிதமாக உருமாற்றம் அடைந்து அதிவேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை பரிந்துரை!

அந்த வகையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. ஓமைக்ரான் வைரஸ் டெல்டா வகையை விட வேகமாக பரவி வருகிறது. ஆனால் குறைந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அமெரிக்காவில் அதிவேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் ஜன.15 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் & இரவு ஊரடங்கு அமல் – அரசின் அறிவிப்பு!

அமெரிக்கா சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று. ஏனெனில் இங்கு கொரோனா பாதிப்பும், கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. தற்போது ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இணைந்து ஓமைக்ரான் மற்றும் கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்த கொரோனா கட்டுப்பாடு குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு முழு ஊரடங்கு அல்லது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!