மாநிலத்தில் ஜன.15 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் & இரவு ஊரடங்கு அமல் – அரசின் அறிவிப்பு!

0
மாநிலத்தில் ஜன.15 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் & இரவு ஊரடங்கு அமல் - அரசின் அறிவிப்பு!
மாநிலத்தில் ஜன.15 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் & இரவு ஊரடங்கு அமல் - அரசின் அறிவிப்பு!
மாநிலத்தில் ஜன.15 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் & இரவு ஊரடங்கு அமல் – அரசின் அறிவிப்பு!

இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஓமைக்ரான் நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது.

ஊரடங்கு கட்டுப்பாடு:

உலகின் பல்வேறு நாடுகளில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடா, அசாம், கோவா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. இதுவரை இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று 1500-க்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. இதனால் மாநில அரசு ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.

விரைவில் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? மாநகராட்சி எச்சரிக்கை!

அத்துடன் தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடக, கேரளா, அசாம், கோவா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அம்மாநில அரசுகள் அமல்ப்படுத்தி உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்காக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பதற்கும் தடை என்றும் அறிவித்துள்ளது.

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு சட்ட பல்கலைக்கழகத்தில் வேலை – ஜன.19 கடைசி நாள்!

இதனை தொடர்ந்து திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் 50% மட்டுமே இயங்க அனுமதி அளித்துள்ளது. மேலும் உணவகங்கள், பப்களில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேருந்துகளில் 50% பயணிகளை மட்டுமே கொண்டு பயணம் செய்ய அனுமதி என்றும் தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்த கட்டுப்பாடுகள் அனைத்து ஜனவரி 15ம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்று பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!