விரைவில் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? மாநகராட்சி எச்சரிக்கை!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் 20,000க்கு மேல் பதிவு செய்யப்பட்டால் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்று மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில் மாநகராட்சி முழுவதும் தற்போது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸின் பெரிதளவு பாதிப்புகளை சந்தித்து வரும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரத்தில் தற்போது நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போதுள்ள கொரோனா வைரஸ் வழக்குகளின் புதிய எழுச்சிக்கு மத்தியில் மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மும்பையில் தினசரி கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டும் பட்சத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு – வயது வரம்பு நீக்கம்! அரசாணை வெளியீடு!
அதே நேரத்தில் திரையரங்குகள் மற்றும் சந்தைகள் போன்ற பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வந்தால் மும்பையில் மினி லாக்டவுன் விதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில் மும்பையில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளுக்கு மத்தியில் 1 முதல் 9 வரையுள்ள வகுப்புகளுக்கான பள்ளிகளை ஜனவரி 31ம் தேதி வரை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
என்றாலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகள் நேரடி முறையில் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மும்பை வாசிகள் அனைவரும் கொரோனாவை கண்டு பீதி அடைய வேண்டாம் என்றும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் வகுத்துள்ள நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் மும்பை குடிமை அமைப்பின் தலைவர் ஐஎஸ் சாஹல் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயில்கள் மூடல்? ஓமிக்ரான் எதிரொலி!
மஹாராஷ்டிராவில், கொரோனாவின் இரண்டாவது அலைக்குப் பிறகு குறைந்து வந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை தலைநகர் மும்பையில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இம்மாநிலத்தில் மட்டும் நேற்று (ஜன.3) ஒரு நாளில் 11,877 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய நாளை விட 29 சதவீதம் அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் மும்பையில் மட்டும் 8,063 பேர் நோய் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தகவல் அளித்துள்ளது.