தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு – வயது வரம்பு நீக்கம்! அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அவர்களின் குழந்தைகள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கான வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீடு:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கும் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் குறைவான தொகையில் சிகிச்சை பெற முடியும். இந்த மருத்துவக் காப்பீட்டிற்காக அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. காப்பீடு மூலம் சிகிச்சையின் மொத்த தொகையில் பாதி தொகை மட்டும் செலுத்தினால் போதும், மீதி மருத்துவ காப்பீடு திட்டத்தில் மூலம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அரசு சார்பாக வழங்கப்படும். கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு சட்ட பல்கலைக்கழகத்தில் வேலை – ஜன.19 கடைசி நாள்!
இதில் மருத்துவ காப்பீடு கட்டணம் 180 ரூபாயில் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது. அரசு ஊழியர்களின் புதிய நிறுவனத்துடனான மருத்துவ காப்பீடு திட்டம் 2025 ஆம் ஆண்டு வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவ காப்பீடு ஒப்பந்த நிறுவனம் சிகிச்சை பெறுவோருக்கு மிகக் குறைவான தொகையை வழங்குவதாகவும், உரிய நேரத்தில் தொகை கிடைப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், மருத்துவ செலவுத் தொகையை பெற ஊழியர்கள் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநருக்கு விண்ணப்பித்து தொகையை பெறலாம் சென்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயில்கள் மூடல்? ஓமிக்ரான் எதிரொலி!
இந்த அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களும் பயன் பெறலாம். அவர்களுக்கான மருத்துவ செலவையும் காப்பீட்டுத் திட்டம் மூலம் பெற முடியும். தற்போது அரசு ஊழியர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கான வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பிரீமியம் தொகையாக கூடுதலாக அரசு ஊழியர் ஜிஎஸ்டியுடன் 20 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.