சென்னையில் 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – போட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடல்!
சென்னையில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் அடிப்படையில் NEET, JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சி மையங்கள் இயங்கி வருகிறது. அந்த வகையில் சைதாப்பேட்டை போட்டித்தேர்வு மையத்தில் 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இம்மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அந்த வகையில் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் மற்றும் கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் நேற்று முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு? அரசின் திட்டம் என்ன!
தமிழகத்தில் மட்டுமின்றி ஓமைக்ரான் பாதித்த அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகளின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இரவு ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் சென்னையில் அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் NEET, JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் வகையில் 3 மையங்கள் சென்னையில் இயங்கி வருகின்றன.
மாநிலத்தில் ஜன.15 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் & இரவு ஊரடங்கு அமல் – அரசின் அறிவிப்பு!
அங்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அப்பள்ளியிலே உணவு மற்றும் தங்குமிடம் கொடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது .அந்த வகையில் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 78 மாணவர்களில் 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சைதாப்பேட்டை போட்டித்தேர்வு பயிற்சி மையம் தற்போது மூடப்பட்டுள்ளது. மற்ற மாணவர்கள் விடுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.