பள்ளிகள் இயங்கும் நேரத்தில் புதிய மாற்றம் – கல்வித்துறை அறிவிப்பு!!
கடும் குளிரின் காரணத்தினால் பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான முழு பட்டியலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி நேரம்:
இந்தியாவில் குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில் டெல்லி, உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய வட இந்திய மாநிலங்களில் அதிகளவில் பனி பொழிந்து வருகிறது. இதனால், பெரும்பாலான மாநிலங்களுக்கு ஜன.15 ஆம் தேதி வரையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது பீகார் மாநிலத்தில் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கடும் குளிரின் காரணமாக ஜன.31 ஆம் தேதி வரையிலும் பள்ளி நேரத்தை மாற்றியமைப்பதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து சரியும் தங்கம் விலை – இன்றைய நிலவரம்!
அதாவது, பூர்னியா, கதிஹார், அராரியா, கிஷன்கஞ்ச், சஹர்சா, மாதேபுரா மற்றும் சுபால் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில், 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரையிலும், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர்கள் வழக்கமான பள்ளி நேரத்தை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.