தமிழக பள்ளிகளில் நேர மாற்றம் – மாணவர்கள் கவனத்திற்கு … புதிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக பள்ளிகளில் நேர மாற்றம் - மாணவர்கள் கவனத்திற்கு ... புதிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக பள்ளிகளில் நேர மாற்றம் - மாணவர்கள் கவனத்திற்கு ... புதிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக பள்ளிகளில் நேர மாற்றம் – மாணவர்கள் கவனத்திற்கு … புதிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இம்மாதம் தொடங்க உள்ளது. இதனால் 11,12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவதால் மற்ற மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பள்ளி நேர மாற்றம்:

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் நேரடியாக பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஓய்வூதியம் பெறுபவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான புதிய போர்டல்! மத்திய அமைச்சர் தகவல்!

இதையடுத்து பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் பாதுகாப்பான முறையில் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 13ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதே போல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் மாதம் முதல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதனால் 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் போது மற்ற மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன்படி 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் மட்டும் தேர்வு நடைபெறும் சமயத்தில் எல்.கே.ஜி., முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1:30 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!