ஓய்வூதியம் பெறுபவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான புதிய போர்டல்! மத்திய அமைச்சர் தகவல்!
நாட்டில் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஓய்வூதியதாரர்களின் இறப்புச் சான்றிதழ் சமர்ப்பித்தல், ஓய்வூதிய சீட்டு பெறுதல் உள்ளிட்டவைகளை எளிமையான முறையில் மேற்கொள்ள தற்போது புதிய போர்டல் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
புதிய போர்டல்:
நாட்டில் ஓய்வதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் தங்களின் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். இதே போன்று ஓய்வூதியதாரர்களின் இறப்புச் சான்றிதழ் சமர்ப்பித்தல், ஓய்வூதியச் சீட்டு பெறுதல் உள்ளிட்டவை மேற்கொள்ள வங்கிகளுக்கு அலைய வேண்டியிருக்கும். தற்போது இத்தகைய செயல்பாடுகளை ஆன்லைன் முறையில் மேற்கொள்ள புதிய போர்டல் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு 2023: விண்ணப்ப பதிவு தொடக்கம் – ஏப்.6ம் தேதி கடைசி நாள்!
அதன்படி https://ipension.nic.in/ என்ற ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்களின் இணையதளம் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த இணையதளத்தை பயன்படுத்தி ஓய்வூதியம் பெறுவோர்கள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல், ஓய்வூதியதாரர்களின் இறப்புச் சான்றிதழ், ஓய்வூதிய சீட்டு மற்றும் ஓய்வூதியச் சீட்டைப் பெறுதல், வருமான வரி விலக்கு உள்ளிட்டவற்றை ஒரே போர்ட்டலில் பெற முடியும்.
SBI மற்றும் Canara Bank-யின் பென்ஷன் சேவா போர்ட்டலை Bhavishya போர்ட்டலுடன் ஒருங்கிணைக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.