தமிழகத்தில் ஜனவரி 3 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? கல்வித்துறை தகவல்!

0
தமிழகத்தில் ஜனவரி 3 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? கல்வித்துறை தகவல்!
தமிழகத்தில் ஜனவரி 3 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? கல்வித்துறை தகவல்!
தமிழகத்தில் ஜனவரி 3 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? கல்வித்துறை தகவல்!

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது சுழற்சி முறையில் இல்லாமல் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு தனது ஆணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சுழற்சி முறையிலேயே தான் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சுழற்சி வகுப்புகள்:

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக பரவி வரும் ஓமைக்ரான் வகை தொற்று மொத்தம் 33 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தமிழக பள்ளிகளில் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்துவது மேலும் நீட்டிக்கப்படலாம். இது குறித்து விவாதிக்க கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மறுஆய்வுக் கூட்டம் விரைவில் என்றும், சுழற்சி அடிப்படையில் நேரடி வகுப்புகளை தொடர்ந்து நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடைகள் திறப்பு நேரத்தில் மாற்றம், புதிய கட்டுப்பாடுகள்? எதெற்கெல்லாம் அனுமதி!

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இடைவேளையின்றி பள்ளிகள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆர்வமாக உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் தங்கள் கற்றல் மற்றும் சமூக வாழ்க்கையை ஏற்கனவே இழந்துள்ளதால், இந்த நேரத்தில் நேரடி வகுப்புகளை நடத்துவது மிகவும் முக்கியமானது. இருப்பினும் ஓமைக்ரான் தொற்று பரவலை நாம் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. கண்டிப்பாகப் பின்பற்றப்படும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் கவனமாகக் கண்காணிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் – வழி முறைகள் இதோ!

மேலும், பள்ளிகளில் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்ஓபி) மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.116 கோடியை ஒதுக்கியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்குவதை மீண்டும் தொடங்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். குழந்தைகளின் பாதுகாப்பு, கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரம் குறித்து பள்ளித் தலைவர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் கூடுதல் பயிற்சி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களின் கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!