தமிழகத்தில் கடைகள் திறப்பு நேரத்தில் மாற்றம், புதிய கட்டுப்பாடுகள்? எதெற்கெல்லாம் அனுமதி!
தற்போதுள்ள ஒமிக்ரான் பரவல் சூழலுக்கு மத்தியில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்துள்ள அரசு இரவு நேரங்களில் செயல்படும் கடைகளுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலைப்பரவல் சற்று குறைந்திருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு மெல்ல திரும்ப துவங்கியுள்ளனர். இதற்கிடையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் தொற்று உலக நாடுகளை ஆட்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இரட்டை இலக்கத்தில் இந்த ஒமிக்ரான் தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் – வழி முறைகள் இதோ!
தவிர ஒமிக்ரான் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்திரகண்ட், மஹாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்திலும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு முதல்வர் முக ஸ்டாலின் இன்று (டிச.24) ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் தமிழகத்தில் இரவு ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்பட்டுள்ள நிலையில், இரவு நேரங்களில் செயல்படும் கடைகளை மூடுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (டிச.25) முதல் ஜனவரி 2 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூடுவதற்கு அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வங்கிகளுக்கு ஜனவரி மாதம் 10 நாட்கள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அதனால் சுற்றுலா தலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் டிச.31 மற்றும் ஜன.1 ஆகிய தேதிகளில் கடற்கரைகளில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள அரசு, கடற்கரை பங்களா, சொகுசு விடுதிகளுக்கும் தடைகளை அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.