தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் – மனுதாரர் கோரிக்கை!

0
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் - மனுதாரர் கோரிக்கை!
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் - மனுதாரர் கோரிக்கை!
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் – மனுதாரர் கோரிக்கை!

தமிழகத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நேரடி வகுப்புகளை நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிடுமாறு வழக்கறிஞர் அப்துல் வகாபுதீன் அளித்த பொதுநல மனுவில் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு :

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நேரத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நோய் பரவல் நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு நோய் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றி நேரடி வகுப்பில் மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர் .கொரோனா பரவல் சூழலில் சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

இந்த நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்துல் வகாபுதீன் கொரோனா பரவி வரும் சூழலில் மாணவர்கள் நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும் கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாணவர்களை நேரடி வகுப்பிற்கு வர சொல்லி பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்த கூடாது. மீறினால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்து பள்ளி நிர்வாகங்களின் சங்க பொது செயலாளர் அளித்த மனுவில் மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

தமிழக அரசின் இ-சேவை மையத்தில் ஜாதிச் சான்றிதழ் பெறும் வசதி – மாவட்ட ஆட்சியர்!

மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. கொரோனா பரவ வாய்ப்பில்லை மூன்றாம் அலை கொரோனா மாணவர்களை பாதிக்கும் என்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில் மனுதாரர் அப்துல் வகாபுதீன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் நேரடி வகுப்பில் மாணவர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை நவம்பர் 24 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!