தமிழகத்தில் நவம்பர் 1 முதல் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் – தியேட்டர்களில் 100% அனுமதி?
தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100% இருக்கைகளுக்கு அனுமதி:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதி முதல் கொரோனா கோரத்தாண்டவம் ஆட தொடங்கியது. இதனால் நாளுக்கு நாள் நோய் தொற்று பரவும் விகிதம் அதிகரித்து வந்தது. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா முதல் அலை கட்டுப்படுத்தப்பட்ட சில மாதங்களில் கொரோனா இரண்டாம் அலை பரவ தொடங்கியது.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் – மனுதாரர் கோரிக்கை!
கடந்த மார்ச் மாதம் முதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கிய கொரோனா 2ம் அலையின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், கோயில்கள், திருவிழாக்கள் மற்றும் திரையரங்குகள், பூங்காக்கள் முதலியவற்றிற்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. சுற்றுலா தளங்கள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் தடை விதிக்கப்பட்ட நிலையில் கொரோனா 2ம் அலையும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!
நோய்த்தாக்கம் குறைந்து வந்த நிலையில் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 50% இறக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் பரவும் விகிதம் கணிசமாக குறைந்து வருவதால் நவம்பர் மாதம் முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 50 சதவீத இருக்கைக்கான அனுமதி வழங்கப்பட நிலையில் கோடியில் ஒருவன், டாக்டர், அரண்மனை 3 போன்ற திரைப்படங்கள் லாபகரமாக ஓடி வருகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பபட்டால் அடுத்த இரண்டு மாதங்களில் 50 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.