தமிழக அரசின் இ-சேவை மையத்தில் ஜாதிச் சான்றிதழ் பெறும் வசதி – மாவட்ட ஆட்சியர்!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் ஜாதி சான்றிதழை இ-சேவை மையங்களின் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சாதி சான்றிதழ்:
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வீட்டில் இருந்தபடியே தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். அரசின் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பான் கார்டு முதலியனவற்றை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளவும் வசதி அமலில் உள்ளது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு முக்கிய ஆவணமாக கருதப்படுவது ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் முதலியன. மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்புகளில் இந்த சான்றிதழ்கள் அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சான்றிதழ்களை பெற இனி தாலுகா அலுவலகம் செல்ல தேவையில்லை.
நவம்பர் முதல் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் – சென்னை பல்கலை முக்கிய அறிவிப்பு!
தேவையான ஆவணங்களை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் ஜாதி சான்றிதழை இ-சேவை மையங்களின் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் வருவாய் துறையின் மூலம் வழங்கப்படும் பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற இணைய வழி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
WhatsApp பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு – புதிய பேமண்ட் வசதி ஸ்டிக்கருடன் அறிமுகம்!
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் ஆனது தொடர்புடைய சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர்களின் கையெழுத்துடன் நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது, பழங்குடியினர் நலன் கருதி அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பித்து பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீலகிரியில் உள்ள பழங்குடியின பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.