நவம்பர் 8ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – 2 நாட்கள் விடுமுறை!
புதுச்சேரியில் நவம்பர் 2 கல்லறை தினத்தை முன்னிட்டும் நவம்பர் 4 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விடுமுறை:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. தினசரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தது. அதன் பிறகு தடுப்பூசிகள் பயன்பட்டால் இந்தியா முழுவதும் பாதிப்புகள் குறைந்து வந்தது. இந்த நிலையில் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பழைய முறையில் பொருட்கள் விநியோகம்!
மற்ற மாநிலங்களை தொடர்ந்து புதுச்சேரியிலும் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் கட்டமாக 9-12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று கல்லறை திருநாள் மற்றும் நவம்பர் 4 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு தீபாவளிக்கு பின் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் தகவல்!
ஏற்கனவே நவம்பர் 1ஆம் தேதி 1-8 வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்தது. அப்போது பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் கூட்டம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தீபாவளி பண்டிகைக்கு பிறகு நவம்பர் 8 ம் தேதி முதல் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.