தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பழைய முறையில் பொருட்கள் விநியோகம்!
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பழைய முறைப்படியே பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பழைய முறைப்படி பொருட்கள்:
தமிழகத்தில் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவு விலையில் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இரண்டாம் அலை கொரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போது அரசு ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கி உதவியது. இந்த நிலையில் தற்போது ரேஷன் பனைவெல்லம் மற்றும் பயிறு வகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்காக நவம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் ரேஷன் கடை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு தீபாவளிக்கு பின் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் தகவல்!
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை இல்லாமல் பழைய முறையில் பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. பயோமெட்ரிக் முறையில் ஸ்மார்ட் கார்டில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். இந்த நிலையில் பயோமெட்ரிக் முறையில் கை விரல் ரேகை பதிவு செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வயது முதிர்த்தவர்கள் கைவிரல் ரேகை பயோமெட்ரிக் கருவியில் பதிவதில்லை.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை (நவ.6) விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை!
இதனால் ஆதாரில் அவர்கள் கைவிரல் ரேகையை அப்டேட் செய்வதற்கு தாலுகா அலுவலகத்திற்கு சென்ற வண்ணம் உள்ளனர். தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் முதியோர்களின் கைரேகை பதிவாகவில்லை என்றாலும் பழைய முறைப்படி ரேஷன் பொருட்களை விநியோகிக்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.