டிச.31 முதல் ஜன.14 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில கல்வித்துறை அறிவிப்பு!
உத்திரப்பிரதேசத்தில் டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி முதல் பள்ளிகளில் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற விடுமுறையை மாநில கல்வித்துறை முதல் முறையாக அறிவித்துள்ளது.
விடுமுறை:
இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக தினசரி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமே நடந்தது. ஒரு ஆண்டுக்கு பிறகு கொரோனா தொற்று சற்று குறைய ஆரபித்ததும் பல்வேறு ஆலோசனைகளுக்கு பின் நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மீண்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கியது. பாடங்கள் நடத்தப்பட்டு வருவதால் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் – அரசு திடீர் உத்தரவு! பொதுமக்கள் அதிர்ச்சி!
கடந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளை மாநில கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. வெகு நாட்களுக்கு பிறகு தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடகியுள்ளது. இந்த நிலையில் உத்திரப்பிரதேசத்தில் 1 – 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வருவதால் டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இன்று முதல் ஜனவரி 7ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
முதன்முறையாக பள்ளிகளுக்கு இதுபோன்ற விடுமுறையை மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. மாநில முழுவதும் ஒரே நேரத்தில் குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறந்த கல்விச் சூழலை கொடுப்பதற்காக பள்ளிகளை சரியான நேரத்தில் திறக்கவும் மூடவும் மற்றும் கோடை, குளிர் கால விடுமுறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி 2022 மே 20ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படும். பிறகு புதிய கல்வியாண்டு 2022 ஜூன் 16ம் தேதி அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.