இன்று முதல் ஜனவரி 7ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளைக் கருத்தில் கொண்டு, மும்பை காவல்துறை டிசம்பர் 30ம் தேதியான இன்று முதல் ஜனவரி 7, 2022 வரை 144 தடை உத்தரவினை விதித்து அரசு அறிவித்துள்ளது.
தடை உத்தரவு:
மகாராஷ்டிரா மாநிலத்தில் புதன் கிழமையான நேற்றைய நிலவரப்படி 3,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 85 பேருக்கு ஓமைக்ரான் தொற்று என்று பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை அதன் முந்தைய நாளை விட 1,728 அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இறப்பு பதிவாகியுள்ளது என்று மாநில சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 8,060 பேருக்கு தொற்று பாதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு விகிதம் 97 சதவீதமாக உள்ளது. தற்போது, மும்பையில் 45 கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் புத்தாண்டு அன்று பொதுமக்கள் கோவில்களுக்கு செல்ல தடை? அமைச்சர் விளக்கம்!
மகாராஷ்டிர கேபினட் அமைச்சர் ஆதித்யா தாக்கரே பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) தலைமையகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளைக் கருத்தில் கொண்டு, மும்பை காவல்துறை டிசம்பர் 30ம் தேதியான இன்று முதல் னவரி 7, 2022 வரை மும்பையில் 144 தடை விதித்துள்ளது. புதிய கோவிட்-19 கட்டுப்பாடுகளின்படி, டிசம்பர் 30 முதல் ஜனவரி 7 வரை புத்தாண்டு கொண்டாட்டங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், பார்கள், பப்கள், ரிசார்ட்டுகள் மற்றும் கிளப்புகள் உள்ளிட்ட மூடிய அல்லது திறந்தவெளியில் பார்ட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.5,000 – முக்கிய கோரிக்கை!
அரசின் இந்த உத்தரவு கிரேட்டர் மும்பையில் உள்ள காவல்துறை ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், டிசம்பர் 30, 2021 இன்று அதிகாலை முதல் ஜனவரி 7, 2022 அன்று இரவு 12 மணி வரை வரை அமலில் இருக்கும். இந்த உத்தரவை மீறும் எந்தவொரு நபரும் இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 188 இன் கீழ் தண்டிக்கப்படுவார், மேலும் தொற்றுநோய் நோய்கள் சட்டம் 1897 மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் தண்டனை விதிக்கப்படும் என்று காவல் துணை ஆணையர் சைதன்யா எஸ் அறிவித்துள்ளார்.