மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் – அரசு திடீர் உத்தரவு! பொதுமக்கள் அதிர்ச்சி!

0
மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் - அரசு திடீர் உத்தரவு! பொதுமக்கள் அதிர்ச்சி!
மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் - அரசு திடீர் உத்தரவு! பொதுமக்கள் அதிர்ச்சி!
மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் – அரசு திடீர் உத்தரவு! பொதுமக்கள் அதிர்ச்சி!

ஓமைக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலங்களில் ஓமைக்ரான் பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் தொடர்ந்து அறிவித்து வருகிறது. இது தொடர்பாக மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இரவு நேர ஊரடங்கு:

உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இது டெல்டா வைரஸை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது. ஆனால் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்த ஓமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. அதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்த ஓமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது.

இன்று முதல் ஜனவரி 7ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு, கேரளா, அசாம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பரவியுள்ளது. அதனால் ஓமைக்ரான் வைரஸ் அதிகம் பரவாமல் தடுக்க பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் தொடர்ந்து அறிவித்து வருகிறது. அதன்படி அசாம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் புத்தாண்டு அன்று பொதுமக்கள் கோவில்களுக்கு செல்ல தடை? அமைச்சர் விளக்கம்!

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டை அமல்படுத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி இரவு 9 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். மேலும் இதனை வருகிற ஜனவரி 31ம் தேதி வரை அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!