பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி வகுப்பு – அரசு அறிவிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்து கொண்டு வருகிறது. அதனால் தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளது. இதையடுத்து தற்போது பள்ளி மாணவர்களின் நலன் கருதி சவூதி அரேபியா அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
யோகா பயிற்சி
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் தடுப்பூசி மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது . ஆனாலும் கொரோனா வைரஸ் பரவல் முழுவதுமாக குறையவில்லை. அத்துடன் கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸான ஓமைக்ரான் பரவல் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியது.
அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி சவுதி அரேபியாவில் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையில் சவுதி அரேபியா அரசு மாணவர்களுக்கு ஒரு முக்கிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது.
SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான முக்கிய பதிவு இதோ..!
கொரோனா கால கட்டம் முடிந்து தற்போது தான் மாணவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். அதனால் மாணவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை மேம்படுத்த மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்க வேண்டும் அளிக்க உள்ளதாக சவுதி அரேபியா அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களின் விளையாட்டு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக யோகா பயிற்சி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இதற்கு மாணவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் மாணவர்கள் அனைவரும் யோகா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் என சவுதி யோகா கமிட்டி தெரிவித்துள்ளது.