தமிழகத்தில் நாளை (ஜன.22) பள்ளிகளுக்கு விடுமுறை – கல்வி ஆணையர் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆசிரியர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில் நாளை (22.01.2022) சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தீவிரமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 23,000 ஐ நெருங்கி விட்டது. இதனையடுத்து முதல்வர் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் இரவு 10 மணி வரை காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதுமட்டுமின்றி ஞாயிற்றுக் கிழமைகளில் மாநிலம் தழுவிய முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு இல்லை – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை கருதி 1-12ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக அலகு தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள போதிலும் ஆசிரியர்கள் வழக்கம் போல பள்ளிகளுக்கு வர பள்ளிக் கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஜன.22ம் தேதி ஆன்லைன் வகுப்புகளுக்கும் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
மேலும் ஆன்லைன் வாயிலாக ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. தற்போது மாணவர்கள் இன்றி பள்ளிகள் செயல்பட்டு வருவதால் நாளை (22.01.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் கொரோனா பரவல் நிலையை பொறுத்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து யோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளார்.