தமிழகத்தில் ஜன.22ம் தேதி ஆன்லைன் வகுப்புகளுக்கும் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜன.31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் வகுப்பு விடுமுறை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் கற்றல் பெருமளவு பாதிக்கப்பட்டது. பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து காணப்பட்டால் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று நாடு முழுவதும் பரவி வருகிறது.
2022ம் ஆண்டில் 17 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசின் பட்டியல்!
இத்தகைய ஓமைக்ரான் தொற்று பரவலை தொடர்ந்து கொரோனா தொற்றும் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஜன.31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாணவர்களின் கற்றல் பாதிக்காத வகையில் அவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள விடுமுறை மாணவர்களுக்கு மட்டுமே என்றும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றாலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகின்றனர். அவர்களுக்கு வழக்கமாக நடந்து வரும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வராததால் ஆசிரியர்களுக்கு இந்த வாரம் சனிக்கிழமை அதாவது ஜன.22ம் தேதி விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்கு சனிக்கிழமை ஆன்லைன் வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.