1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மஹாராஷ்டிராவில் பள்ளி மாணவர்களின் நேரடி கற்றல் முறை பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு ஜனவரி 24 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறினார்
பள்ளிகள் திறப்பு:
இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிவேகத்தில் தீவிரமடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
ICC T20 உலகக்கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதல்!
இந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. பொதுமக்களும் எவ்வித அச்சமும் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளை மூட கடந்த 8ம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. இந்த வகையில் மாணவர்களின் நலன் அடிப்படையில் பிப்ரவரி 15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – குவியும் புகார்கள்! முதல்வர் இன்று ஆலோசனை!
இதனால் மாணவர்கள் நேரடி கற்றல் முறை பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி செயற்பாட்டாளர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதன் அடிப்படையில் மஹாராஷ்டிராவில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 24 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் மற்றும் மழலையர் பள்ளி வகுப்புகளையும் அதேநாளில் திறக்க முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறினார். இது தொடர்பான பரிந்துரைக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.