மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு இல்லை – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அத்துடன் முழு ஊரடங்கு குறித்து அம்மாநில அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முழு ஊரடங்கு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன் ஓமைக்ரான் பரவலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஜன.22ம் தேதி ஆன்லைன் வகுப்புகளுக்கும் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இந்த தொற்று பரவல் எண்ணிக்கை மேலும் அதிகரித்து ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி முதல் வாரத்தில் படிப்படியாக குறையும் என நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி தொற்று பரவல் தற்போது குறைந்து வருகிறது. அந்த வகையில் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதையடுத்து 90% அதிகமான நோயாளிகள் வீட்டில் இருந்தபடியே மாத்திரைகளை எடுத்துக் கொண்டு குணமடைந்து வருகின்றனர்.
2022ம் ஆண்டில் 17 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசின் பட்டியல்!
அத்துடன் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் குணமடைந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து அமைச்சர் ஆர்.அசோக் கூறியதாவது, தற்போது கொரோனா பரவலின் தீவிரம் சற்று குறைந்துள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் தொற்று பரவல் தீவிரமடைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.