தமிழகத்தில் நாளை பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
கேரளா மக்களால் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.8) ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறையை அறிவித்துள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மகாபலி மன்னரை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாட்டை ஆண்ட மகாபலி மன்னர் ஆண்டுதோறும் தனது மக்கள் மகிழ்ச்சியாய் வாழ்வதை காண பூலோகம் வர வரம் கேட்டதை அடுத்து மன்னர் திருவோண நாளில் நாட்டிற்கு வருகை தருவதாக ஐதீகம். அதனால் மக்கள் இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளில் வண்ண மலர்களால் வீட்டை அலங்கரித்து காண வரும் மன்னரை வரவேற்பார்கள்.
தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!
மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் தொடர்ச்சியாக 10 நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவில் மட்டுமில்லாது தமிழகத்திலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கேரளா மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் பண்டிகையை கொண்டாட செப்டம்பர் 8ம் தேதி தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மட்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
தற்போது 9 மாவட்டங்கள் அதாவது மேற்கண்ட மாவட்டங்களுடன் செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு 9 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறையை அளித்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்