அடுத்த 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – ஹிஜாப் எதிர்ப்பு விவகாரம்!

0
அடுத்த 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - ஹிஜாப் எதிர்ப்பு விவகாரம்!
அடுத்த 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - ஹிஜாப் எதிர்ப்பு விவகாரம்!
அடுத்த 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – ஹிஜாப் எதிர்ப்பு விவகாரம்!

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்காததை அடுத்து ஏற்பட்ட விவகாரத்தில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு

கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் நிலவும் அசாதாரணமான சூழலை முன்னிட்டு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை பின்பற்றும் வகையில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 நாளைக்கு முன்பு கர்நாடகாவின் உடுப்பி, ஷிவமொக்கா, பாகல்கோட் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் அவர்கள் வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ரஞ்சி கோப்பையில் விளையாடும் இந்திய நட்சத்திரம் சேதேஷ்வர் புஜாரா – ரசிகர்கள் உற்சாகம்!

இதனால் மாநிலம் முழுவதும் பிரச்சனைக்குரிய சூழல் உருவாகி இருக்கிறது. இந்த விவகாரத்தை அடுத்து இந்து இளைஞர்கள், சில அமைப்புகளின் ஆதரவுடன் காவி துண்டை அணிந்து கல்லூரிக்கு வருகை தந்திருந்தனர். ஆனால் இந்த மாணவர்களும் வகுப்பறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்ட முதல்வர் பசவராஜ் பொம்மை அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஆங்கில பாட திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்!

இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் கர்நாடக மக்கள் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாநிலத்தில் தற்போது நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளேன். சம்மந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!