ரஞ்சி கோப்பையில் விளையாடும் இந்திய நட்சத்திரம் சேதேஷ்வர் புஜாரா – ரசிகர்கள் உற்சாகம்!

0
ரஞ்சி கோப்பையில் விளையாடும் இந்திய நட்சத்திரம் சேதேஷ்வர் புஜாரா - ரசிகர்கள் உற்சாகம்!
ரஞ்சி கோப்பையில் விளையாடும் இந்திய நட்சத்திரம் சேதேஷ்வர் புஜாரா - ரசிகர்கள் உற்சாகம்!
ரஞ்சி கோப்பையில் விளையாடும் இந்திய நட்சத்திரம் சேதேஷ்வர் புஜாரா – ரசிகர்கள் உற்சாகம்!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணி பேட்ஸ்மேன் புஜாரா சௌராஷ்டிரா அணியில் விளையாட உள்ளதாக BCCI தெரிவித்துள்ளது.

BCCI அறிவிப்பு:

கொரோனாவின் 3 வது அலை பரவி வருவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசும் ,மாநில அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும் மேற்கொண்டு வருகின்றன. இதைதொடர்ந்து நோய்த்தொற்று பாதிப்பால் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டித் தொடர்கள் அனைத்திற்கும் இந்திய கிரிக்கெட் வாரியமான BCCI தடை விதித்தது. அதேபோல் கடந்த ஆண்டு டிசம்பரை ஒட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டித் தொடர்கள் BCCI அறிவிப்பின் படி ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஆங்கில பாட திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்!

மேலும் நடப்பு 2021-22 பருவத்திற்கான ரஞ்சி கோப்பை சி.கே. நாயுடு கோப்பை மற்றும் மகளிர் சீனியர் இருபது ஓவர் லீக் ஆகிய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் உள்நாட்டு போட்டிகள் பெரிதும் நடைபெறவில்லை. நடைபெற்று கொண்டிருக்கும் போட்டிகளிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது 2022 ஆண்டிற்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான குரூப் எலைட் போட்டிகள் பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் மார்ச் 5 ஆம் தேதி முடிவடைகிறது. சமீபத்தில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை BCCI தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இப்போட்டிகள் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை ஆகிய 3 இடங்களில் நடைபெறவுள்ளது.

இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!

இந்நிலையில் ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான சௌராஷ்டிரா அணியில் இந்திய டெஸ்ட் அணி பேட்ஸ்மேன் புஜாரா விளையாட உள்ளதாக BCCI தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் பார்மில் இல்லாதது இந்திய டெஸ்ட் அணிக்கு பலவீனமாக அமைந்தது. இதனால் புஜாரா நடக்கவிருக்கும் இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பெறுவாரா என்று அனைத்து தரப்பிலும் கேள்வி எழுந்துள்ளது. தையடுத்து தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாடி புஜாரா பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!