தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஆங்கில பாட திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்!
தமிழகத்தில் நாளை முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 10ம் தேதி நடத்த உள்ளதால் அன்று நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தேர்வு தேதி மாற்றம்
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொது தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த நவம்பர் மாதத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலை வேகமாக பரவ தொடங்கியது. அதனால் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளித்தது.
இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைய தொடங்கியது. அதனால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளை கடந்த பிப்ரவரி 1 தேதி முதல் திறக்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் தள்ளிவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2ம் கட்ட தேர்தல் பயிற்சி தேதி வெளியீடு!
இதையடுத்து தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் பிப்ரவரி 10ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் திருப்புதல் தேர்வு நடத்த முடியாது. அதனால் பிப்ரவரி 10ம் தேதி நடைபெற இருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில பாடத்திற்கான திருப்புதல் தேர்வு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஆங்கில பாடத்திற்கான திருப்புதல் தேர்வு பிப்ரவரி 17ம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.