தமிழக அரசு, உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.
அரசு உதவித்தொகை:
தமிழகத்தில் மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஊனமுற்றவர்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் என அனைவருக்கும் இலவச கல்வி வழங்கும் நோக்கில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது அரசு மாற்று அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தனிப்பட்ட விருப்பமாகும் பிரைவசி பாலிசி விதிமுறை – வாட்ஸ்அப் அப்டேட்!
தகுதியுடைய மற்றும் ஆர்வமுள்ள மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தினை கல்வி நிறுவனங்களிலேயே பெற்று கொள்ளலாம் என கூறப்படுகிறது. மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை நவ. 5ம் தேதிக்குள்ளும், புதுப்பிக்கப்பட வேண்டிய விண்ணப்பங்களை செப். 30ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களது வங்கி விவரங்களை அதனுடன் இணைத்தல் கட்டாயமாக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை நவ. 14 தேதிக்குள்ளும் புதிய விண்ணப்பங்களை டிச.31ம் தேதிக்குள்ளும் இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்களுக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். மேலும் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் www.tn.gov.in/bcmbcdept என்ற இணையதளத்தில் உள்ளது என சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.