தனிப்பட்ட விருப்பமாகும் பிரைவசி பாலிசி விதிமுறை – வாட்ஸ்அப் அப்டேட்!
வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக அவ்வப்போது பல அம்சங்களையும் புதிதாக அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ்அப் அப்டேட்:
வாட்ஸ்அப் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் சேவையாகும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமல்லாமல் KaiOS அம்சம் கொண்ட சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. வாட்ஸ்ஆப்பில் பல அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்களும் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ்அப் செயலி முக்கிய இடத்தில் உள்ளது. பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.
செப்.1 முதல் பள்ளிகள் திறப்பது குறித்து மறுபரிசீலனை – அரசுக்கு கோரிக்கை!
வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் புதிய சேவை விதிமுறைகளை அறிவித்தது. இந்த விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளாததால் பலர் வேறு மெசேஜிங் செயலிகளுக்கு மாறிவிட்டனர். இதனால் வாட்ஸ்அப் நிறுவனம் பல கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது. பின்னர் வாட்ஸ்அப் பெரும் பின்னடைவை சந்தித்தது. புதிய கொள்கையை ஏற்காதவர்கள் பயன்பாட்டின் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த முடியாது என்று வாட்ஸ்அப் கூறியதே இதற்கு காரணம்.
TN Job “FB Group” Join Now
இதனால் மக்கள் விதிமுறைகளை ஏற்காவிட்டாலும் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த முடியும் என்று வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. அதவாது, WaBetaInfo-ன் புதிய அறிக்கையின் படி பயனர்கள் தங்கள் பிரைவசி பாலிசியை ஒத்துக் கொள்வதை விருப்பமாக்கியுள்ளது. இதனால் வாட்ஸ்அப் செயல்பாட்டில் மாற்றம் இருக்காது. ஆனால் பிசினஸ் கணக்கிற்கு செய்தி அனுப்ப புதிய விதிமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.