செப்.1 முதல் பள்ளிகள் திறப்பது குறித்து மறுபரிசீலனை – அரசுக்கு கோரிக்கை!
கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து சட்டசபை உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழக அரசு சார்பில் நடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் போன்று புதுவையிலும் நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாவது நாளாக புதுவையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும் குறிப்புகள், குறிப்பு எடுக்கும் அரசுத்துறை செயலர் மற்றும் இயக்குனர்கள் சரியாக சட்டப்பேரவைக்கு வருவதில்லை என குற்றம் சாட்டினார்.
Tokyo Paralympics 2020 ஈட்டி எறிதல் – தங்கம் வென்றார் இந்திய வீரர் சுமித் ஆன்டில்!
எனவே அவர்கள் சட்டப்பேரவை முடியும் வரை சட்டப்பேரவை அலுவல்களை குறிப்பெடுக்க வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது குறித்த ஆலோசனை சட்டப்பேரவை தலைவர் செல்வம் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை செயலர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் பேசிய சட்டப்பேரவை தலைவர், தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து துறை செயலர்கள் மற்றும் இயக்குனர்களும் சட்டப்பேரவை தொடங்கி முடியும் வரை இருக்க வேண்டும். அவ்வாறு வராதவர்கள் மீது தலைமை செயலரிடம் தெரிவித்து, பின்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து அரசுத்துறை அதிகாரிகள் உடனடியாக சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதுவையில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது தொடர்ந்து பள்ளிகள் மீண்டும் திறப்பதை பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் புதுவைக்கு தனிக்கல்வி வாரியம் அமைக்க வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள தற்காலிக ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும் சட்டசபை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.