தமிழகத்தில் வேலையில்லாதோருக்கு அரசு சார்பில் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதனை பெற ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அரசு உதவித்தொகை:
தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதை தொடர்ந்து படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது அதனை தொடர்ந்து புதுப்பித்திருப்பதும் அவசியமாகும். வயது வரம்பு மற்றும் குடும்ப ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
வங்கக்கடலில் உருவான புதிய புயல் சின்னம் – தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
திராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதிற்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதிற்கு மிகாமலும் இருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பிப்பவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். முறையாக 9ம் வகுப்பு முடித்து 10ம் வகுப்பில் தோல்வி அடைந்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.200 மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், மேல்நிலை கல்வியை முடித்தவர்களுக்கு 400 ரூபாய் மற்றும் பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் வழங்கப்படுகிறது.
தமிழக காவல்துறையினருக்கு 10% ஊதிய உயர்வு, 8 மணிநேர வேலை – அரசுக்கு பரிசீலனை!
இவ்வாறு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு 3 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகையானது விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தகுதிகள் உள்ள இளைஞர்கள் சிவகங்கையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார்.