தமிழக காவல்துறையினருக்கு 10% ஊதிய உயர்வு, 8 மணிநேர வேலை – அரசுக்கு பரிசீலனை!
தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக 10% ஊதிய உயர்வை வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தகவல் அளித்துள்ளது.
ஊதிய உயர்வு
திருவிழாக்கள், பண்டிகை காலங்கள், குடும்ப நிகழ்வுகள் என அனைத்திலும் பங்கேற்காமல் தனது கடமையை செவ்வனே செய்து வரும் காவல்துறை பணியாளர்களுக்கு 10% ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதாவது கரூர் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ‘ஒரு நாளில் தொடர்ந்து 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் பணி செய்து வரும் தமிழ்நாடு காவல்துறை ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க வேண்டும்.
1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.13ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் காவல்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்த போது, தமிழக காவல்துறையில் காவலருக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தற்போது பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை, மன அழுத்தம் அதிகரித்துள்ளது. காவல்துறையினரின் பணி மகத்தானது. எனவே, காவல்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 10% ஊதிய உயர்வை வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
அமேசான், ஃபிளிப்கார்டில் வேலைவாய்ப்பு – மோசடி கும்பல் குறித்து காவல்துறை எச்சரிக்கை!
மேலும் வரும் நாட்களில் 3 ஷிப்ட் என்ற முறையில் காவல் துறையினருக்கு 8 மணிநேர வேலை முறையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் உட்பட்ட ஆணையம் ஒன்றை 3 மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.