1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.13ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.13ம் தேதி பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.13ம் தேதி பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.13ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள பள்ளிகள் 1 முதல் 5ம் வகுப்பு வரை செப்டம்பர் 13ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

திரிபுரா மாநில அரசு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி பள்ளிகள் செப்டம்பர் 13 முதல் COVID-19 நெறிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்படும். அம்மாநில அரசாங்கம் ஏற்கனவே 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கியுள்ளது. கோவிட் -19 பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டதையடுத்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மாநிலத்தில் தற்போது செயலில் உள்ள கோவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கை 667, இறப்பு விகிதம் 0.96% ஆகும். மேலும் மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள, அவர்கள் பெற்றோரின் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.

தமிழகத்தில் நாளை 10,000 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் – சென்னையில் 1,600 இடங்கள் ஏற்பாடு!

திரிபுரா அரசு ஏற்கனவே ஆகஸ்ட் 25, 2021 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை மீண்டும் திறந்துள்ளது. பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் பிறவற்றிற்கு பொருந்தும். கொரோனா பரவுவதைத் தடுக்க பள்ளிகள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியை மாணவர்கள் பின்பற்றும் வகையில் ஏற்பாடு செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

செப்.30 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இந்த அறிவிப்பு திரிபுராவின் தொடக்கக் கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று பள்ளிகள் மூடப்படுவதால் ஏற்படும் கற்றல் இழப்பு ஆகும். மேலும், குழந்தைகளின் பாதுகாப்பு, தூய்மை பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடங்கள் சீரான இடைவெளியில் சுத்திகரிக்கப்படும் மற்றும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை கட்டாயமாக்கப்படும். பள்ளிகளில் மதிய உணவு திட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!