வங்கக்கடலில் உருவான புதிய புயல் சின்னம் – தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம்:
நாட்டில் தற்போதைய கால நிலையில் அவ்வப்போது புயல்கள் உருவாகிறது. அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் புயல்கள் உருவாவதற்கு காரணம் என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த மே மாதம் அரபிக்கடலில் டவ்தே புயல் உருவானது. இது இந்தியாவின் வட மாநிலங்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் கிழக்கு வங்க கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
அமேசான், ஃபிளிப்கார்டில் வேலைவாய்ப்பு – மோசடி கும்பல் குறித்து காவல்துறை எச்சரிக்கை!
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா, பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவாகி தொடர்ந்து 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் சில இடங்களில் மழை பெய்ய செய்யும்.
தமிழக காவல்துறையினருக்கு 10% ஊதிய உயர்வு, 8 மணிநேர வேலை – அரசுக்கு பரிசீலனை!
இதனால் வங்கக்கடல் பகுதியில் மத்திய வங்க கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதி ,வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதி, ஒடிசா – மேற்கு வங்க கடலோரப் பகுதி, வடக்கு அந்தமான் கடல் பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.