தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி உதவித்தொகை! இன்றே கடைசி நாள்!
தமிழகத்தில் மாணவர்களுக்கு உதவிபுரியும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக தமிழக மாணவர்களுக்காக சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பற்றி பார்க்கலாம்.
கல்வி உதவித்தொகை
இந்தியாவில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி செலவினங்களுக்கு உதவி புரியும் வகையில் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டம் மூலமாக மத்திய அரசு வழங்கி வருகிறது. இதையடுத்து 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு நிதி ஆதரவிலான ப்ரி மெட்ரிக் திட்டத்திலும் தற்போது விண்ணப்பபிக்கலாம் என்று அறிவித்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
SBI வங்கி காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – CBO தேர்வு அட்மிட் கார்டு!
இத்திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,200 முதல் ரூ.4,200 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக 10ம் வகுப்பு முதல் அதற்கும் மேற்பட்ட வகுப்பு மாணவர்கள் விண்ணப்பித்து உதவி தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதையடுத்து தற்போது ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகையை பெற்று கொள்ள விண்ணப்பித்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Reliance Jio நிறுவனத்தில் தினமும் 2.5 GB வழங்கும் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!
இத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க https://escholarship.tn.gov.in/ என்ற இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதற்கு விண்ணப்பிக்க சாதி சான்று, வருமான சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்புக் கணக்குப் புத்தக நகல், ஆதார் எண் போன்ற ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பித்து முடிக்க வேண்டும். அத்துடன் மாணவர்கள் சரியான முறையில் விண்ணப்பிக்கிறார்களா? என்று கல்வி நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.