பொதுத்துறை வங்கிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான திட்டங்கள் – மத்திய நிதியமைச்சர் முக்கிய தகவல்!
நாடு முழுவதும் உள்ள எஸ்.சி பிரிவினருக்கான நிலுவை காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வேண்டும் எனவும், அரசின் திட்டங்கள் சரியான நேரத்தில் சென்றடையும் வகையில் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் என அனைத்து பொதுத் துறை வங்கிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.
எஸ்சி பிரிவினருக்கு திட்டங்கள்:
மத்திய மாநில அரசுகள் எஸ்.சி பிரிவினரின் முன்னேற்றத்திற்காக ஏகப்பட்ட நலத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் எஸ். சி பிரிவினரின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எஸ்சி பிரிவினரின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அதன் பின் பொதுத்துறை வங்கிகளிடம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அதில், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் 18 சதவிகிதம் எஸ். சி பிரிவினர் இடம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும் எஸ்சி பிரிவினர்களின் தொழில் மேம்பாட்டுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் எஸ்சி பிரிவினர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விவரம் மற்றும் அவர்களின் கடன் விவரங்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் ஆண்டுக்கு இருமுறை சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும் அவர்களின் திட்டங்கள் சரியான முறையில் சென்றடையும் வகையில் வங்கிகள் விரிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் நிதி சேவைகள் துறை அக். 2 ஆம் தேதி நடத்தப்பட இருக்கும் சிறப்பு முகாமில், நிலுவையில் இருக்கும் எஸ்சி பிரிவினருக்கான குறைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்