அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த ஆலோசனையை இன்று அமைச்சரவை கூட்டத்தில் நடத்தியுள்ளது. ஆலோசனையின் முடிவில் அகவிலைப்படி எத்தனை சதவீதம் உயர்த்தப்பட உள்ளது என்பதை அறிவித்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முறையே அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறது. மாறி வரும் விலைவாசியை மத்திய அரசு ஊழியர்கள் சமாளிக்கும் வகையில் இந்த அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அகவிலைப்படியானது நாட்டின் பணவீக்க விகிதத்தின் அடிப்படியில் கணக்கிடப்படுகிறது. இவை நிதியாண்டில் ஒவ்வொரு மாதத்திலும் உள்ள விகிதத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் முக்கிய அமைச்சர்களுடன் நடந்துள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி இன்றைய ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ், மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகை போன்றவை குறித்தும், மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய 2022 ஜூலை முதல் டிசம்பர் தவணைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் விடுமுறை நீட்டிப்பு – பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கான தற்போதைய தவணைக்கான அகவிலைப்படி 4% உயர்த்தி மொத்தம் 38% DA வழங்குவது குறித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அறிவிக்கப்பட்ட இந்த 4% DA தொகையானது ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், டெல்லி, மும்பை, அகமதாபாத் போன்ற ரயில் நிலையங்களை மேம்படுத்த 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்