Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இந்திய அஞ்சல் துறையில் உள்ள செல்வமகள் சேமிப்பு திட்டம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அத்திட்டத்தின் மாதாந்திர தொகையை ஆன்லைன் மூலம் செலுத்துவது எப்படி என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
முக்கிய அறிவிப்பு:
பொதுமக்கள் தற்போது வங்கிகளுக்கு இணையாக தபால் நிலையத்திலும் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த திட்டங்களில் கணிசமான வட்டி விகிதத்தில் முதிர்வு தொகை பெறப்படுகிறது. அந்த வகையில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளை பெற்ற நடுத்தர பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பெண் குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்ற தேவைகளுக்கு முதிர்வு தொகை உதவியாக இருக்கும்.
தமிழகத்தில் ஜன.26ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் போஸ்ட் ஆஃபிஸில் கணக்கை தொடங்கலாம் மற்றும் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 2 பெண் குழந்தைகள் இருந்தாலும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இந்த திட்டத்தில் இணைந்தவர்கள் மாத தொகையை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்.
1. முதலில் உங்களுடைய IPPB மொபைல் பேங்கிங் ஆப்பை திறந்து, அதில் 4 இலக்க MPINஐ பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
2. இப்போது ‘DOP சேவைகள்’ என்பதைக் கிளிக் செய்து, பின்பு ‘சுகன்யா சம்ரிதி கணக்கு’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. இப்போது SSA கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ஐடியை உள்ளிடவும்.
4. பின்பு வைப்புத் தொகையை உள்ளிட்டு ‘பணம்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
5. இப்போது செலுத்த வேண்டிய தொகையை உறுதி செய்து, ‘உறுதிப்படுத்து’ பட்டனை கிளிக் செய்யவும்.
6. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
7. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வெற்றிகரமான செய்தி வரும்.