தமிழகத்தில் 1 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை – தொடக்கக்கல்வி இயக்குனர்!
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை (சனிக்கிழமை) அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விடுமுறை:
தமிழகத்தில் அடுத்தடுத்து பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அவர்களின் கல்வி நிலை பின்னடைவை சந்தித்தது. அப்போது அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி தொற்று பரவலை குறைந்தது. அதனால் கடந்த வருடம் 2021 செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தின கொண்டாட்டம் – முதல்வர் அறிவிப்பு!
இதனால் ஜனவரி மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதன் விளைவாக சிறார்கள் தொற்றில் இருந்து பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு கல்வி நிலை ஆண்டுத்தேர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நேரத்தில் பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியானது தேர்வுகள் நெருங்கி வருவதால் பாடங்களை விரைந்து முடித்து மாணவர்களை தயார்படுத்த சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது ஏப்ரல் மாதம் நடைபெற்று வருவதால் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பள்ளி செல்லும் மாணவர்கள் இதனால் பாதிப்படைகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க கோரிக்கைகள் எழுந்த நிலையில் சனிக்கிழமையான நாளை (ஏப்ரல் 23) நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு (1-8) தொடக்கக்கல்வி இயக்குனர் விடுமுறையை அறிவித்துள்ளார். மற்ற வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.