சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி – பட்டம் வென்ற சென்னை வீரர் சத்யன்!
சென்னையை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரன், சர்வதேச ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் உக்ரைன் நாட்டை சேந்த யெவின் பிரைஸ்செபா என்பவரை தோற்கடித்து 3 ஆவது முறையாக சர்வதேச பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
டேபிள் டென்னிஸ்
செக்குடியரசில் அமைந்துள்ள ஒலாமாக் நகரில் சர்வதேச ஓப்பன் டேபிள் டென்னிஸ் போட்டி தற்போது நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த வீரர் சத்யன், இந்திய அணி சார்பில் கலந்து கொண்டார். இந்த போட்டியின் ஒற்றையர் பிரிவில், சுவீடனை சேர்ந்த துருல்ஸ் மோர்கார்த்தை எதிர்கொண்ட சத்யன் அரை இறுதி ஆட்டத்தை கைப்பற்றினார்.
IPL 2021 அப்டேட்ஸ் – உலகின் நம்பர் 1 வீரரை களமிறக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!
இதை தொடர்ந்து டேபிள் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உக்ரைன் நாட்டின் யெவின் பிரைஸ்செபா என்பவரை எதிர்கொண்ட அவர், தனது சர்வதேச பட்டத்தை மீண்டுமாக உறுதி செய்துள்ளார். சுவாரஸ்யமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சத்யன் 11-0, 11-6, 11-6, 14-12 என்ற செட் கணக்கில் உக்ரைன் நாட்டு வீரரை தோற்கடித்து பட்டத்தை சொந்தமாக்கினார். இந்த பட்டம் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் சத்யன் வென்ற 3 ஆவது சர்வதேச பட்டமாகும்.
TN Job “FB Group” Join Now
சென்னையை சேர்ந்த 32 வயதான டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இரட்டையர் மற்றும் குழு பிரிவில் தங்க பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது தொழில் முறை விளையாட்டில் உலக தரவரிசையில் 24 வது இடத்தை வகித்துள்ள அவர், உலக டாப் 25 ITTF தரவரிசையில் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.