IPL 2021 அப்டேட்ஸ் – உலகின் நம்பர் 1 வீரரை களமிறக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!
ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ள நிலையில், இதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உலகின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளரை ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள்:
இந்தியாவில் ரசிகர்கள் அனுமதியின்றி நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா நோய்த்தொற்று பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகள் வரும் செப்.19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் துபாய்க்கு பறந்துள்ளனர். அங்கு தனிமைப்படுத்துதலுக்கு பின்னர் வலை பயிற்சியை தொடங்கி உள்ளனர். இம்முறை கொரோனா அச்சம், சர்வதேச போட்டிகள் உள்ளிட்ட சில காரணங்களால் பல நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
IND vs ENG 3வது டெஸ்ட் Live Updates – 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது இந்தியா! பேட்ஸ்மேன்கள் சொதப்பல்
இதனால் அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லருக்கு பதிலாக க்ளென் பிலிப்ஸை களமிறக்க உள்ளது. 46 பந்துகளில் சதமடித்துள்ள க்ளென் பிலிப்ஸ் மீது எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளது. தற்போது டி 20 போட்டிகள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 இடத்தில உள்ள சுழற்பந்து வீச்சாளரான தப்ரைஸ் ஷம்ஸியை ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோரும் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ராஜஸ்தான் அணி டாப் கிளாஸ் வீரர்களை தேடித்தேடி ஒப்பந்தம் செய்து வருகிறது.
தமிழக தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு அனுமதி – CEO க்களுக்கு அதிகாரம்!
ராஜஸ்தான் அணியில் தற்போது டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், லியாம் லிவிங்ஸ்டன், முஸ்தாபிசுர் ரஹ்மான், க்ளென் பிலிப்ஸ் மற்றும் தப்ரைஸ் ஷம்ஸி ஆகிய வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். தப்ரைஸ் ஷம்ஸி ஏற்கனவே 2016ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி உள்ளார். மறுபுறம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து விலகியுள்ள ஆஸ்திரேலியாவின் கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக கார்டன் களமிறங்க உள்ளார். கார்டன் பங்கேற்கும் முதல் ஐபிஎல் தொடர் இதுவாகும். ஐபிஎல் சீசன் எஞ்சியுள்ள போட்டிகளில் செப்.20ம் தேதி கொல்கத்தாவிற்கு எதிராக பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது.